Saturday 12 November 2011

உங்கள் "சாய்ஸ்" !!


அது ஒரு ஞாயிற்றுகிழமை. விருதுநகர் அருகே உள்ள கிராமத்தில் என் சொந்தபந்தங்களுடன் வீட்டு திண்ணயில் பொழுதை கழித்துக்கொண்டிருந்தேன். "ஞாயிற்றுகிழமை னா இரண்டு !!" ஆயிற்றே. (ஆமாம். தினமலர் செய்தித்தாளை தான் நானும் குறிப்பிட்டேன். ;) ) அன்று செய்தித்தாளுடன் இணைப்பாக வந்த வாரமலரில் இருந்த குறுக்கெழுத்து போட்டியுடன் போராடிக்கொண்டிருந்தேன்.


அதில் ஒரு வினா. "மேலிருந்து கீழ்: 3. பெப்சி கம்பெனியின் CEO (7) ". சற்று குழம்பித்தான் போனேன். அவர் பெயர் இந்திரா என்று நியாபகம் இருந்தது. ஆனால் அவரின் குடும்பபெயரை மறந்துவிட்டேன்.


எதிரில் ஊர் பெருசு ஒருவர் தென்பட்டார். அவரிடம் இந்த கேள்வியை கேட்டேன். (கிராமத்தில் ஊர் பெருசுகள் அனைவரும் உலக விஷயங்களை கரைத்துகுடித்திருப்பார்கள் என்ற நம்பிக்கை தான் !!. அதற்கு தானே திண்ணைகள்  பயன்படுகின்றன !! தவறான நபரிடம் தவறான கேள்வியை கேட்டுவிட்டோமோ என்று ஒரு கணம் தோன்றியது. கேட்டுத்தான் பார்ப்போமே என்று அசட்டுத்தைரியம். )


அவர் சற்றும் அசரவில்லை. உமா என்று சொல்லிவிட்டு அசடு வழிய சிரித்தார். எனக்கு அப்படியே தூக்கிவாரிப்போட்டது.


நான் சுதாரிப்பதுக்குள் அவரே தொடர்ந்தார். "என்ன தம்பி! நம்ம பெப்சி உமா வ தானே சொல்ரீக. டிவில வந்து புது பாட்டா போடுமே ! அந்த புள்ள தான ! நல்ல செக்கசெவேர்னு ! சே ! இப்பொல்லாம் அந்த புள்ள வர்ரதே இல்ல.! " என்று புலம்பியவாரே நடையை கட்டினார்.


(விவரம் அறியாத நண்பர்களின் கவனத்திற்க்கு, "பெப்சி உமா-சிறு குறிப்பு வரைக !! பெப்சி உமா, "பெப்சி உங்கள் சாய்ஸ்" என்ற நிகழ்ச்சியை பல காலமாக தொகுத்து வழங்கியவர். விடாமுயற்சியை தமிழ்நாட்டு மக்களுக்கு சொல்லி கொடுத்ததில் இவருக்கு பெரும் பங்கு உண்டு. இவரின் தாரக மந்திரமான "keep trying. keep on trying" அதற்கு சாட்சி ;) தமிழ்நாட்டில், குஷ்புக்கு அடுத்தபடியாக இவருக்கு தான் கோவில் கட்டுவதாக திட்டம். என்ன காரணத்திலோ, அது கைவிடப்பட்டது :'(:'( " )


பெப்சி உமாவுக்கு இத்தனை ரசிகர்களா என்ற வியப்பு ஒரு பக்கம் இருந்தாலும் அதையும் தாண்டி ஏதோ ஒன்று மனதை நெருடிக்கொண்டிருந்தது. "பெப்சி உங்கள் சாய்ஸ் " ஏன் ! ஒரு நிகழ்ச்கியின் பெயரை ஆங்கிலம் கலக்காமல் வைக்க முடியாதா !


அரசின் வரிவிலக்குக்காக சொல்லவில்லை! கூடுதலாக ஒரு தமிழ் வார்த்தையை கற்று கொள்ளலாமே என்ற ஆர்வத்தில் தான் கேட்கிறேன். சரி ! இந்த "சாய்ஸ்' என்ற வார்த்தைக்க்கு வருவோம். இதன் தமிழாக்கத்தை தெரிந்து கொள்ள முயற்ச்சித்துக்கொண்டு இருக்கிறேன். "தேர்வு, தேர்ந்தெடுத்தல் ". இவையே நான் பெற்ற பதில்கள்.


"select" என்பதன் தமிழாக்கம் தானே "தேர்வு" ! ஆக, நான் இன்னும் என் "சாய்ஸ்" ஐ தேடிக்கொண்டு தான் இருக்கிறேன். நீங்களும் உங்கள் "சாய்ஸ்" ஐ தேடிப்பாருங்கள். இது போல், நாம் அன்றாட வாழ்வில் உபயோகிக்கும் ஆங்கில வார்த்தைகளின் தமிழாக்கத்தை தெரிந்து கொள்ள முயற்ச்சிக்கலாமே ! நம் தமிழ் புலமையும் பெருகும். நம் மொழியும் நம்முடன் சேர்ந்து முன்னேறும். நம் மொழியை நாமே பேசாவிட்டால், வேறு யார் பேசுவார்கள் !!


தமிழ் பேச மறுக்கும் இந்த தலைமுறையினர் வைக்கும் குற்றச்சாட்டு இது தான் "நாங்கள் உபோயொகிக்கும் பொருட்கள் அனைத்தும் வெளிநாட்டு இறக்குமதியே ! அவர்கள் ஆங்கிலத்தில் இடும் பெயரைத்தானே உபயோகிக்க முடியும் !!"


வெளிநாட்டு பொருட்களின் மீது இத்தனை ஆர்வம் காட்டும் நம்மால் ஏன் அதன் தமிழாக்கத்தை தெரிந்துகொண்டு அதை பயன்படுத்த முடிவதில்லை!! முடிந்தவரை தமிழாக்கத்தை தேடிப்பார்ப்போம். கிட்டாவிட்டால், நாமே அதன் தமிழாக்கத்தை உருவாக்குவோம்.


தவறேதும் இல்லை தோழர்களே ! ஆங்கில மற்றும் வெளிநாட்டு மோகத்தில், தமிழை மறவாது இருப்பது நம் பொறுப்பு. காலத்திற்கு ஏற்றவாரு தன்னை மாற்றி கொள்வதே தமிழின் சிறப்பு! ஆக, முடிந்தவரை தமிழ் வார்த்தைகளை கொண்டே பேசுவோம். எவ்வளவோ பண்ணிட்டோம்! இத பண்ண மட்டோமா!!


முயற்ச்சிப்போம் தோழர்களே!! :):) இம்முயற்சியின் முதல் கட்டமாக, பெப்சி நிறுவனத்தின் ''CEO" வான இந்திரா நூயி, அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக பொறுப்பெற்கிறார்.

`

Thursday 8 September 2011

கடவுளின் தேசம்

கேரளா! பெயரை கேட்டவுடன் மனதில் ஒரு வித உணர்வு படர்ந்தது. அது பதற்றமா, உற்சாகமா அல்லது சோகமா என்று சொல்ல தெரியவில்லை. கேரளா, கடவுளின் தேசம் என்று பல பேர் சொல்லி கேட்டதுண்டு. அந்த கடவுளின் தேசத்தில் நானும் குடியேறப்போகிறேன்! கேரளா என்றதும் ஆழகான பெண்களும், வளைந்து நெளிந்து இருக்கும் தென்னை மரங்களும், மூக்கில் பேசுவது போன்று தோன்றும் மலையாள மொழியும் நினைவுக்கு வந்தன. கேரளாவில் நிறைய ஆச்சரியங்களும், அற்புதங்களும் இருக்கின்றன என்று வெகுவாக நம்பினேன். (எடுத்துகாட்டு: பத்மநாபசுவாமி கோயில்!! முடிந்தால், ஒரு கை அள்ளிக்கொண்டு வரலாம் என்று திட்டம். ;) ) அந்த மக்களை பற்றி தெரிந்துகொள்ள ஆசையாக இருக்கிறது. அழகான பெண்களுக்கு மத்தியில் வாழபோகிறேன் என்று நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. கடவுளின் சொந்த தேசத்தில் அவருடன் சேர்ந்து வாழப்போகிறோம் என்ற நினைப்பு, ஒரு வித பயத்தை ஏற்படுத்தியது. கடவுளுக்கு அருகில், மிக அருகில் வாழும் போது நாம் செய்யும் தவறுகள் அனைத்தையும் அவர் உடனுக்குடன் தெரிந்து கொள்வார். அதே சமயம், நாம் செய்யும் நற்காரியங்களை உடனுக்குடன் அறிந்து கொண்டு, நம்மை ஆசீர்வதிக்கவும் தவற மாட்டார் என்று நம்புகிறேன்.

நான் கேரளாவில் குடியேறியது காலத்தின் கட்டாயம் என்று வைத்து கொள்வோம். ஆனால், கடவுளுக்கு அந்த நிர்பந்தம் இருந்திருக்காது என்று நம்புகிறேன். ஆக, கடவுள் எப்போது, ஏன் கேரளாவில் குடியேறினார் என்று தெரிந்து கொள்ள மிகவும் ஆவலாக இருக்கிறது. ஒரு வேலை, அவரும் கேரளத்து பெண்களின் அழகில் மயங்கி இங்கு குடியேறிவிட்டாரோ ! ( குருவாயூரில் இருக்கும் "கிருஷ்ணர்" கோயிலை பார்க்கும் போது, என் சந்தேகம் உண்மையாக இருக்கும் என்ற எண்ணம் வலுக்கிறது!! ) கடவுள் கேரளாவில் குடியேறிவிட்டார் என்று சொல்லும் போது, எந்த கடவுளை பற்றி பேசுகிறோம் என்ற சந்தேகம் மனதுக்குள் எழுகிறது. புராணத்தை கொஞ்சம் புரட்டி பார்போமே!

நாம் வணங்க கூடிய ஹிந்து கடவுள்களை நமக்கு அறிமுகம் செய்தது ஆர்யர்கள் . அவர்கள் இயேசு பிறப்புக்கு முன்னரே நம் மண்ணில் வாழ்ந்தவர்கள். ஆக, ஹிந்து கடவுள்கள் இன்றைய கேரளாவை அடைந்து 21 நூற்றாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அல்லாவை அழைத்து வந்த பெருமை மங்கோலியரை சாரும். கடைசியில் வந்து சேர்ந்தார் இயேசு. போர்ச்சுகல் நாட்டினர் தான் அவரை இங்கு அழைத்து வந்தனர். (வாஸ்கோ டா காமா). கண்டிப்பாக எந்த கடவுளும் கேரளத்து பெண்களின் அழகில் மயங்கி இங்கு வரவில்லை என்று நம்பிக்கை வந்துவிட்டது. காரணம் , மேலை நாட்டு பெண்கள் கொள்ளை அழகு. அப்படி இருந்தும் கடவுள் இங்கு வருவதற்கு காரணம் இங்கு உள்ள பெண்களின் அழகு இல்லை. சான்று சரி தானே! எது எப்படியோ, இத்தனை காலமாக, கேரளத்தில் மூன்று மதத்தின் கடவுள்களும் ஒன்றாக இருக்க முடிந்ததால் தான் என்னவோ, கேரளா, கடவுளின் தேசம் ஆனது என்பது என் நம்பிக்கை. கடவுளின் தேசமாம் கேரளாவில் நுழைந்தவுடன் ஓர் உறுதிமொழி எடுத்துக்கொண்டேன்.

"கடவுள்கள் அனைவரும் ஒன்றாக இருந்து ஒரு அழகிய தேசத்தை உருவாக்க முடியுமென்றால், நம் மனிதர்கள் அனைவரும் எந்த பேதமும் இன்றி, ஒன்றினைந்து ஓர் அழகிய மக்கள் தேசத்தை உருவாக்க முடியும் தானே. "

முதல் கட்டமாக, மலையாளத்தில் பேச, எழுத கற்றுக்கொள்ள போகிறேன் :):)
விரைவில், மலையாளத்தில் பரையலாம் :):)